Wednesday, January 3, 2007
தர்மம்
தர்மம்என்பது மனிதகுலத்திற்கு பாரதத் திருநாட்டின் ஈடுஇணையற்ற கொடை. அதன் பழமையினாலும், பயன் பாட்டினாலும் , உலகம் தழுவிய பரந்த சிந்தனையாலும் இந்த தேசத்தைச் சார்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனையையும் மேம்படச் செய்கிறது. இன்று நாம் அனுபவித்துவரும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் அடிப்படைக் காரணம் தர்மத்தைவிட்டு விலகிச் செல்வதே ஆகும். புலனின்பங்களின் புனலில்சிக்கி நிலையிழந்த மனிதகுலத்தின் பிரச்சனைகள் மேலும் பன்மடங்கு பெருகி வருகின்றன . நாம் நமது இச்சைகளை, வேண்டும் என்னும் வேட்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதின் மூலம் அமைதியிழந்து ஆனந்தத்தை இழந்து தவிக்கின்றோம். இந்த சூழ்நிலையில் நமது அனைத்து சமுதாய, பொருளாதார , மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ஒரேதீர்வு " தர்மம் மட்டுமே. தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை மீண்டும் அமைப்பது மட்டும்தான் நமது அனைத்து இன்னல்களுக்கும் முழுமையான தீர்வாகும்".
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment